மதியம் தடுப்பூசி பெற்றவர் இரவு மரணம்; வல்வெட்டிதுறையில் சம்பவம்
யாழ்.வல்வெட்டித்துறை – ஊறணியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றைய தினம் மதியம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில் நேற்றிரவு திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார். பெண் நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசியின் முதலாவது செலுத்துகையைப் பெற்றுக்கொண்ட நிலையில் நேற்று நள்ளிரவு திடீர் சுகயீனம் ஏற்பட்டிருக்கின்றது. இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்ததாக அவர்கள் கூறப்படுகின்றது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தின் மீது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed